இலங்கையின் ஐந்தில் ஒரு பங்கு ஆபத்தில்..!

Share it:
ad
இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பங்கு மண்சரிவு மற்றும் மண்ணுக்குள் புதையுண்டு போகும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தேசிய கட்டுமாண ஆய்வு நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இலங்கையின் நிலப்பரப்பில் சுமார் 12122 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு இவ்வாறு மண்சரிவு மற்றும் மண்ணுள் புதையுண்டு போகும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது.

குறிப்பாக கண்டி, மாத்தளை, நுவரெலியா, ரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களே இவ்வாறு ஆபத்தை எதிர் கொண்டுள்ளதாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது.

இயற்கை காரணிகள் மற்றும் மனித செயற்பாடுகள் காரணமாக இந்த ஆபத்து ஏற்பட்டிருப்பதாக தேசிய கட்டுமாண ஆய்வு நிறுவனம் தனது எச்சரிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Share it:

Post A Comment:

0 comments: