கரு ஜயசூரியவுக்கு சிக்கல்...?

Share it:
ad
(Tw)

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக கரு ஜயசூரிய நிறுத்தப்பட உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ள போதிலும், ஐ.தே.கட்சியின் தலைமை அதற்கு எந்த அனுமதியும் வழங்காது என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரு ஜயசூரிய பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டால் தான் அதற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட போவதாக அந்த கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, கட்சியின் தலைமைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இந்த நிலைமையில் கரு ஜயசூரியவை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தினால் கட்சி இரண்டாக பிளவுப்படும் என்பது ரணில் விக்ரமசிங்கவின் நிலைப்பாடாக இருந்து வருகிறது. 

எவ்வாறாயினும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கரு ஜயசூரிய பொது வேட்பாளராக போட்டியிட போவதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியானதை தொடர்ந்தும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, கரு ஜயசூரியவை தொடர்பு கொண்டு வாழ்த்தியுள்ளார். 

எனினும் அது குறித்து இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் இது சம்பந்தமாக பல செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கரு ஜயசூரிய ஜனாதிபதியிடம் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
Share it:

Post A Comment:

0 comments: