காற்சட்டை + சேர்ட் அணிந்து, பொலிஸ் அதிகாரியாக நடித்த பௌத்தபிக்கு கைது

Share it:
ad
தம்புள்ள - குருநாகல் வீதியில் பொலிஸ் அதிகாரி போல் நடித்த பிக்கு ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பிக்கு காற்சட்டை,சேர்ட் அணிந்த நிலையில் வீதியில் நின்று வாகன சாரதிகள் சிலருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரின் கைப்பையில் காவியுடை காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிக்கு, தான் பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பொலிஸ் பொறுப்பதிகாரி என்றும் தெரிவித்துள்ளார். மேற்படி சந்தேக நபரின் நடமாட்டம் தொடர்பாக கலேவல பொலிசாருக்குக்கு கிடைத்த தகவலையடுத்து அவர் கைதாகி உள்ளார்.

இவர் பாணந்துறைப் பிரதேசத்திலுள்ள பௌத்த மத குரு என விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
Share it:

Post A Comment:

0 comments: