''முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கில், தனியான நிர்வாகத்தை கோருவது பாரதூர பிரச்சினை''

Share it:
ad
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்தில் தனியான நிர்வாக பிராந்தியத்தை கோருவது பாரதூரமான பிரச்சினை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதத்தின் மூன்றாம் முறை வாசிப்பின் ஆரம்ப விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சட்டம், சமாதானம், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி உள்ளிட்ட 10 அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு பற்றிய விவாதம் இன்று நடைபெறுகிறது.

ஒரு ஆங்கில பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் விவாதத்தின் ஆரம்பத்தில் கருத்து வெளியிட்ட விஜேதாச ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சிங்கள மக்களையும் முஸ்லிம் மக்களை பிரிக்க முயற்சிப்பதாக கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுப்பதில்லை எனவும் விஜேதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

Share it:

Post A Comment:

0 comments: