"இனவாதமும், சிந்திக்க வேண்டிய இலங்கை முஸ்லிம்களும்" கட்டாரில் ஈமானிய அமர்வு

Share it:
ad
 by. கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) 
    
"இனவாதமும், சிந்திக்க வேண்டிய இலங்கை முஸ்லிம்களும்"  என்ற 
தலைப்பில்   கட்டாரில்   வாராந்தஈமானிய அமர்வு    

  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு 

தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா  இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி 16 OCT 2014  வியாழக்கிழமை இரவு 08.30மணிக்கு கட்டார் அல்மனார் டவருக்கு பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித் அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறவுள்ளது.

கத்தார் வாழ் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்ப!!!     

ஒவ்வொரு வியாழன் தோறும் மாலை  8:30   முதல் 9:30 வரை நபிகளார் வாழ்க்கை வரலாறுத் தொடர் மற்றும் மிகவும் பிரயோசனமான தலைப்புகளில் சொற்பொழிவுகள் நடைபெற்று வருகின்றன. 

இன்ஷா அல்லாஹ் இவ்வாரம் "இனவாதமும், சிந்திக்க வேண்டிய இலங்கை முஸ்லிம்களும்"  என்ற தலைப்பில் பிரதான உரை நடைபெறும் 

 அனைத்து சகோதர சகோதரிகளும்  இந்நிகழ்ச்சியில்  கலந்து கொண்டு நம் இஸ்லாமிய அறிவையும் ஈமானிய பலத்தையும் வளர்த்துகொள்ள வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.    இத்தகவலை நண்பர்கள் / தெரிந்தவர்களுக்கும் பகிர்ந்துகொள்வோம்.

பெண்களுக்கும்,சிறுவர்களுக்கும் விஷேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


Share it:

Post A Comment:

0 comments: