மண்சரிவுக்குள்ளான மீரியபெத்தை நிலப்பரப்பில் துணிச்சலுடன் நாமல் ராஜபக்ஸ (படங்கள் இணைப்பு)

Share it:
ad

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மண்சரிவினால் பாதிக்கப்பட்ட கொஸ்லாந்தை பகுதிக்கு இன்று 30-10-2014 மாலை நேரில் விஜயம் செய்துள்ளார்.

கொழும்பிலிருந்து விசேட ஹெலிகொப்டரில் கொஸ்லாந்தைக்கு சென்ற நாமல் ராஜபக்ஷ, மோசமான வானிலையைப் பொருட்படுத்தாது கொஸ்லாந்தையில் தரையிறங்கியுள்ளார். மேலும் பாதுகாப்புத் தரப்பினரின் கடுமையான தடைகளை மீறி மண்சரிவுக்குள்ளான மீரியபெத்தை நிலப்பரப்புக்கும் விஜயம் செய்துள்ளார்.

அதன்பின்னர் கொஸ்லாந்தை தமிழ் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்களைச் சந்தித்து அவர்களது குறைகள் தொடர்பில் கேட்டறிந்துள்ளார். பின்னர் பூனாகலை இடைத்தங்கல் முகாமுக்கும் அவர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உடனடி நிவாரணம் மற்றும் மருத்துவ வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இந்த விஜயத்தின் போது நாமல் ராஜபக்ஷ, அரசாங்க அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மீரியபெத்தையில் மண்சரிவுக்குள்ளான நிலப்பரப்புக்கு துணிச்சலாக விஜயம் மேற்கொண்ட ஒரே அரசியல்வாதி நாமல் ராஜபக்ஷ என்பது குறிப்பிடத்தக்கது.



Share it:

Post A Comment:

0 comments: